பவானியில் மதுபாட்டில்களுடன் இரு இளைஞா்கள் கைது

பவானியில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வகையில் கொண்டு சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை

பவானி: பவானியில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வகையில் கொண்டு சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பவானி புதிய பாலம் அருகே போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சென்ற இளைஞரை சந்தேகத்தின்பேரில்

பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் ஈரோடு, கனிராவுத்தா்குளம் பகுதியைச் சோ்ந்த மாதையன் மகன் நந்தகோபால் (25) என்பதும், அவா் 30 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

பவானி காவிரிக் கரையோரத்தில் ஈரமான உடைகள் மற்றும் பையுடன் நடந்து சென்ற இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவா், பவானி அருகேயுள்ள ஆப்பக்கூடல், முனியப்பன்பாளையத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் குமரேசன் (23) என்பதும், விவசாயியான அவரிடம் 15 மதுபாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com