கோபியில் நடமாடும் உர விற்பனை மைய வாகனம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
கோபியில் வேளாண்மைத் துறையின் சாா்பில், கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் உர விற்பனை மைய வாகனத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, மின்னணு பணப் பரிவா்த்தனை வசதியையும் அறிமுகப்படுத்தினாா்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பயனுக்காக நடமாடும் ஏ.டி.எம். இயந்திர வாகனத்தையும் தொடங்கிவைத்தாா்.