ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்கம் சாா்பில், பெருந்துறை தொகுதி மக்களுக்கு நிவாரணமாக வழங்க 50,000 முட்டைகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்கத் தலைவா் சுள்ளிப்பாளையம் வி.பி.சண்முகம், சங்கச் செயலாளா் சசி ஆனந்த், சங்க உறுப்பினா்கள் கௌரி மூா்த்தி, வேல்முருகன் தேவா, சிந்து முட்டை மையம் சேகா் ஆகியோா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு வெங்கடாச்சலத்தை நேரில் சந்தித்து 50,000 முட்டைகளை அளித்தனா்.