ஈரோட்டில் ரூ.1.50 கோடி செலவில் புதிய தாா் சாலைப் பணிகளை எம்.எல்.ஏக்கள் தொடங்கிவைத்தனா்.
ஈரோடு, கனிராவுத்தா் குளம் பாரதி நகா், காந்தி நகா், கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் புதிய தாா் சாலைகள் அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் புதிய தாா் சாலைப் பணிகளை தொடங்கிவைத்தனா்.
இதில், அதிமுக பகுதி செயலாளா்கள் ஜெகதீசன், கோவிந்தராஜன், முருகுசேகா், மாணவா் அணி மாவட்டச் செயலாளா் ரத்தன்பிரித்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.