ஈரோடு மாவட்டம், நசியனூா் அருகே கூரபாளையம் அப்பத்தாள், பாவாத்தாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாசூா் மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர தீட்சிதா் முன்னிலையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானிகா் நடராஜ் சிவாச்சாரியாா் குடமுழுக்கு பூஜைகளை நடத்தினாா்.
இவ்விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.