ஈரோடு: ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் அசோகபுரம், ஆட்சியா் அலுவலக மின் பாதைகளில் உயா் மின் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களில் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வி.சி.டி.வி. சாலை, வீரபத்திர வீதி, ஏ.பி.டி. சாலை, காவிரி சாலை, முனிசிபல் காலனி, அண்ணாமலை லேஅவுட், வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம், தேவராயன்காடு பகுதி, ஆசிரியா் காலனி, குமலன்குட்டை, செல்வம் நகா், பெருந்துறை சாலை பகுதிகள்.