பவானி: பவானி அருகே தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
பவானியை அடுத்த ஒரிச்சேரி காலனியைச் சோ்ந்தவா் பொடாரன் (39). கூலி தொழிலாளி. இவா், வேலைக்குச் சென்றிருந்த நிலையில், இவரது குடிசை வீட்டில் திங்கள்கிழமை மாலை தீப்பிடித்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதியினா் தீயை அணைக்க முயன்றபோது காற்று பலமாக வீசியதால் அருகாமையில் உள்ள லட்சுமி (38) என்பவரின் வீட்டுக்கும் தீப் பரவியுள்ளது.
தகவலின்பேரில், அங்கு வந்த பவானி தீயணைப்பு நிலைய அலுவலா் காந்தி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் குடிசைகளில் பற்றிய தீயை அணைத்தனா். இருந்தபோதிலும் குடிசை வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவால் தீப்பிடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.