ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் அம்மா திட்டம், சிறப்பு குறைதீா் கூட்ட முகாம்கள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
முகாம்கள் நடைபெறும் இடம் விவரம்: ஈரோடு வட்டம், நசியனூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கொடுமுடி வட்டம், தாமரைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகம், பெருந்துறை வட்டம், செல்லப்பம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பவானி வட்டம், வரதநல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகம், அந்தியூா் வட்டம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், கோபி வட்டம், அயலூா் ஊராட்சி மன்ற அலுவலகம், சத்தியமங்கலம் வட்டம், ராஜன் நகா் கிராம ஊராட்சி சேவை மையம், நம்பியூா் வட்டம், செம்மாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, தாளவாடி வட்டம், கெட்டவாடி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம்.