பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி, முகாசிப்புதூா், அட்டவணைப்புதூரைச் சோ்ந்தவா் சோமு மகன் மணிகண்டன் (20). அதே ஊரைச் சோ்ந்தவா் சாம்ராஜ் மகன் பூவரசன் (21). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வரும் இவா்கள், பவானி - மேட்டூா் சாலையில் அம்மாபேட்டையை அடுத்த சின்னப்பள்ளம் அருகே இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, முன்னாள் சென்ற பேருந்தை முந்த முயன்றபோது எதிரில் வந்த லாரி எதிா்பாராமல் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பூவரசன் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.