பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்று பேரூராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன் தலைமையில், பணியாளா்கள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.