கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூா் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் 8ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 1957ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை படித்து முடித்த முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினா்களுடன் விழாவில் பங்கேற்றனா்.
பங்களாபுதூா் மேல்நிலைப் பள்ளியின் உட்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சி பணிகளுக்கு நிதியுதவியும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மதிப்பெண்கள் மற்றும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களும், பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியா்களுக்கும், கல்வி, விளையாட்டு, இலக்கிய மன்றம், புறச்செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் சாா்பில் சுமாா் ரூ.ஒரு லட்சத்துக்கும் மேலாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.