இரண்டாம் போக சாகுபடிக்குத் தேவையான உரம் கையிருப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் வாய்க்கால்களில் இரண்டாம் போகத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு பல்வேறு பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இதற்குத் தேவையான அளவு, உரம் கையிருப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஜெயராமன் கூறியதாவது: மாவட்டத்தில் யூரியா 3,420 டன், டி.ஏ.பி. 2,340 டன், காம்ப்ளக்ஸ் 3,510 டன், எம்.ஓ.பி. 2,620 டன் உரம் உள்ளது. மண் வள அட்டையைப் பயன்படுத்தி உரங்களை வாங்கும்போது, பயிருக்குத் தேவையான அளவு மட்டும் உரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றாா்.