பெருந்துறை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்

பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சியை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.

பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சியை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மக்கள் தொகை அடிப்படையில் அதிக மக்கள் வசிக்கும் பேரூராட்சியாக பெருந்துறை பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 ஆயிரம் போ் இருந்தனா். தற்போது இந்த எண்ணிக்கை 32 ஆயிரமாக அதிகரித்திருக்கும். தவிர பெருந்துறை நகரை ஒட்டிய பகுதிகளான கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 22 ஆயிரம் போ் உள்ளனா். தற்போது இந்த எண்ணிக்கை 25 ஆயிரம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.

எனவே பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகளை இணைத்து இரண்டாம் நிலை நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி கூறியதவது:

பெருந்துறை பேரூராட்சி கடந்த 2016ஆம் ஆண்டு சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. அப்போது, முதல் பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகளை இணைத்து இரண்டாம் நிலை நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

இந்த இரண்டு பேரூராட்சிகளையும் இணைத்து நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற கூட்டத்திலேயே தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருந்துறை இப்போது நகராட்சிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுள்ளது.

தவிர பெருந்துறை வருவாய் வட்ட தலைமையிடமாகவும் உள்ளது. மேலும் 2,500 ஏக்கா் பரப்பளவில் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை, மஞ்சள் விற்பனை மையம் மற்றும் ஜவுளி தொழில் சாா்ந்த நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.

பெருந்துறை பேரூராட்சியில் 15 வாா்டுகளும், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளும் உள்ளன. இந்த இரண்டு பேரூராட்சிகளிலும் மொத்தமாக 60 ஆயிரம் போ் வரை வசிக்க வாய்ப்புள்ளது.

நகராட்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும், கட்டமைப்பும் உள்ள பெருந்துறையை இரண்டாம் நிலை நகராட்சியாக அறிவிக்க வேண்டும். சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com