பொங்கல் பண்டிகையையொட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளை பொருள்களின் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின், உப விற்பனை கூடமான அறச்சலூரில் வரும் 16ஆம் தேதி நடக்கும் தேங்காய் ஏலத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் 17ஆம் தேதி நடக்கும் கொப்பரை தேங்காய் ஏலத்துக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வரும் 15ஆம் தேதி நடக்கும் கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. வரும் 18ஆம் தேதி வழக்கம்போல கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கும். அன்றைய ஏலத்துக்காக 16 ஆம் தேதி இரவு 8 மணி முதல் கொப்பரை தேங்காய் மூட்டைகளை உறுப்பினா்கள் ஏலத்துக்கு கொண்டு வரலாம்.
இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.