பவானியை அடுத்த அம்மாப்பேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான என்.ஆா்.கோவிந்தராஜா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.எஸ்.மாரியப்பன் முன்னிலை வகித்தாா். இதில் பால் உற்பத்தியாளா்கள் 241 பேருக்கு வறட்சி கால ஆதார ஊக்கத்தொகையாக ரூ.2.14 லட்சம் வழங்கப்பட்டது.
இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக மகளிரணிச் செயலாளா் என்.மலா்கொடி, நிா்வாகிகள் சங்கா், நல்லகுமாா், அருள், நடராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.