பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில், கருங்கரட்டில், தமிழ்நாடு நூகா் பொருள் வாணிபக் கழகம் சாா்பில், புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பானுமதி தலைமை வகித்தாா். நுகா்பொருள் வாணிபக் கழக தரக் கட்டுப்பாட்டு மேலாளா் லியோ ராபா்ட் லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து வைத்துப் பேசினாா்.
இதில், பெருந்துறை ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமாமகேஸ்வரன், காஞ்சிக்கோவில் நகரச் செயலாளா் சீதப்பன், காஞ்சிக்கோவில் பேரூராட்சி முன்னாள் தலைவா் சிவசுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.