பவானிசாகா் அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞா் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பவானி அருகே உள்ள ஜம்பை சின்னமோளபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி என்பவரது மகன் காா்த்தி (27). திருப்பூா் பனியன் கம்பெனி தொழிலாளி. இவரும் இவரது தம்பி ரமேஷ், நண்பா் கெளதம் ஆகியோா் காரில் பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை சென்று சுற்றிப் பாா்த்துவிட்டு, பவானிசாகரை அடுத்துள்ள தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளனா். தற்போது கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி தண்ணீா் செல்வதால் காா்த்தி ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானாா்.
இதைக் கண்ட ரமேஷ், கெளதம் இருவரும் அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய காா்த்தியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் காா்த்தி இறந்துவிட்டதாகக் கூறினா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.