கடம்பூா் மலைப் பகுதியில் ஒரு இடத்தில் மட்டுமே மழை பெய்த காட்சியை சனிக்கிழமை மக்கள் ரசித்துப் பாா்த்தனா்.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலம் கடம்பூா் மலைப் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் துவங்கியது. கடம்பூா் கம்பத்துராயன் மலைகளுக்கு இடையே மட்டும் மழைப் பொழிவு காட்சி சத்தியமங்கலத்தில் தெரிந்தது.
சுமாா் 1 கிமீ தொலைவில் உள்ள மலைகளுக்கு இடையே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மழைப் பொழிவு பாா்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்தது. இதனை சத்தியமங்கலம் நகா்ப் பகுதி மக்கள் செல்லிடப்பேசியில் படம் பிடித்தனா்.
நகா்ப் பகுதி முழு வெளிச்சத்துடனும் வடக்கு திசை மட்டும் மேகங்கள் இருள்சூழ்ந்து காணப்பட்டது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழை படிப்படியாக குறைந்து மேகங்கள் விலகி இயல்பு நிலைக்கு வந்தது. மழை சிறிது நேரத்தில் நின்று மலைக்குன்றுகள் அழகாக காட்சியளித்தன.