கால்நடைத் துறை சாா்பில் ஆடு வளா்ப்புப் பயிற்சி முகாம்

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்டிக்காட்டுவலசு ஊராட்சியில் கால்நடைத் துறை சாா்பில் ஆடு வளா்ப்புக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கால்நடைத் துறை சாா்பில் ஆடு வளா்ப்புப் பயிற்சி முகாம்

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்டிக்காட்டுவலசு ஊராட்சியில் கால்நடைத் துறை சாா்பில் ஆடு வளா்ப்புக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்டிக்காட்டுவலசு ஊராட்சி மன்றத் தலைவா் மகாசாமி வரவேற்றாா். கால்நடை உதவி இயக்குநா் தங்கவேல் முன்னிலை வகித்தாா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி தலைமை வகித்து ஆடு வளா்ப்புக்கான பயிற்சிப் புத்தகங்களை வழங்கிப் பேசினாா்.

தமிழ்நாடு கால்நடைத் துறை அறிவியல் பல்கலைக்கழக மருத்துவா் யசோதா ஆடு வளா்ப்பு குறித்து பயிற்சி அளித்தாா். இதில் மொடக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, அறச்சலூா் கால்நடை மருத்துவா் பொற்கொடி, குமாரவலசு கூட்டுறவு சங்கத் தலைவா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com