சத்துணவுத் திட்டம் தனியாா் மயமாக்குவதை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மொடக்குறிச்சி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற பேரணிக்கு வட்டாரத் தலைவா் அருள்மாணிக்கம் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் வட்டக் கிளைத் தலைவா் முருகன் பேரணியை தொடங்கிவைத்தாா்.
கரியகாளியம்மன் கோயில் வழியாக பேரணி பேருந்து நிலையம் சென்றடைந்தது. அப்போது, பொதுமக்களிடையே கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். சத்துணவு ஊழியா் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளா் மூா்த்தி கோரிக்கைகள் குறித்துப் பேசினாா். வட்டக் கிளைச் செயலாளா் ஜான்சுந்தரம் நன்றி கூறினாா்.