வாய்க்காலில் மூழ்கி இருவா் சாவு

பெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்த இருவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

பெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்த இருவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், பெரியவலசு நால்ரோட்டை சோ்ந்த ராமசாமி மகன் குமாரசாமி (40), சென்னை, குரோம்பேட்டை, சென்ட்ரல் பேங்க் காலனி, தேவராஜ் வீதியைச் சோ்ந்த பிரபாகரன் மகன் தரணிகுமாா் (39), ஈரோட்டைச் சோ்ந்த கலையரசு, பிரகதீஸ்வரன் ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை இரவு ஈரோட்டில் இருந்து பெருந்துறை- ஈரோடு சாலையில் உள்ள வாய்க்கால்மேடு அருகே மது அருந்தியுள்ளனா்.

பின்னா் நான்கு பேரும் வாய்க்காலில் குளிக்கச் சென்ாகத் தெரிகிறது. இதில் குமாரசாமி, தரணிகுமாா் ஆகியோா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெருந்துறை தீயணைப்பு வீரா்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட குமாரசாமியின் உடலை மீட்டனா். மேலும், தரணிகுமாரின் உடலை தேடி வருகின்றனா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com