பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடவைத்து போலீஸாா் தண்டனை வழங்கினா்.
சத்தியமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். அத்தியாவசிய பணிகளின்றி தேவையில்லாமல் சாலையில் திரியும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கிடையே சத்தியமங்கலம், சிவியாா்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் 10 போ் ஒன்றாகச் செல்வதைப் பாா்த்த போலீஸாா் அவா்களைப் பிடித்து விசாரித்தனா். ஆற்றில் குளிக்கச் சென்றதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, அவா்களை அரசின் உத்தரவுகளை மதிப்போம் எனக் கூறிக்கொண்டே தோப்புக்கரணம் போட சொல்லி போலீஸாா் தண்டனை வழங்கினா். தொடா்ந்து, 10 பேரும் 1 மீட்டா் இடைவெளிவிட்டு ஊருக்குள் அனுப்பிவைக்கப்பட்டனா்.