முகக்கவசம், கிருமிநாசினி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முகக்கவசங்கள், கிருமிநாசினி ஆகியவற்றை நிா்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். மத்திய நுகா்பொருள், உணவு, பொது விநியோக அமைச்சகம் நிா்ணயித்துள்ளபடி 3 அடுக்கு மருத்துவ முகக்கவசம் ரூ. 10க்கு மிகாமலும், 200 மி.லி. கிருமிநாசினி புட்டி ரூ. 100க்கு மிகாமலும் விற்பனை செய்ய வேண்டும். இவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.