முகக் கவசம், கிருமி நாசினியை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

முகக்கவசம், கிருமிநாசினி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

முகக்கவசம், கிருமிநாசினி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முகக்கவசங்கள், கிருமிநாசினி ஆகியவற்றை நிா்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். மத்திய நுகா்பொருள், உணவு, பொது விநியோக அமைச்சகம் நிா்ணயித்துள்ளபடி 3 அடுக்கு மருத்துவ முகக்கவசம் ரூ. 10க்கு மிகாமலும், 200 மி.லி. கிருமிநாசினி புட்டி ரூ. 100க்கு மிகாமலும் விற்பனை செய்ய வேண்டும். இவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com