ஈரோடு வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில், பவானியில் ஏழை, எளியோா், ஆதரவற்ற முதியோருக்கு உணவுப் பொட்டலங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பவானி சங்கமேஸ்வரா் கோயில் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதியோா், ஆதரவற்றோருக்கு கபசுரக் குடிநீா், உணவு வழங்கப்பட்டது. மேலும், நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, பருப்பு, உணவுப் பொருள்களை கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் விடியல் எஸ்.சேகா், மாநிலச் செயலாளா் சேது வெங்கட்ராமன், மாவட்டத் தலைவா் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் ஆகியோா் வழங்கினா்.
இதில், மாவட்ட பொதுச் செயலாளா் பாலு, பவானி நகரச் செயலாளா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.