அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 32 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,127 கிலோ எடையுள்ள 3 ஆயிரத்து 455 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிக விலையாக டன் ரூ. 29 ஆயிரத்து 790, குறைந்த விலை டன் ரூ. 25 ஆயிரத்து 310 என ரூ. 32 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் ஒன்றுக்கு ரூ. 5.97 முதல் ரூ. 16.11 வரை ஏலம் நடைபெற்றது.