சத்தியமங்கலம்: திம்பம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு வனப் பகுதியில் கவிழ்ந்தது.
கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து மாங்காய் பாரம் ஏற்றிய லாரி திண்டுக்கல் செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. மலைப் பாதையில் 3ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு லாரி வனப் பகுதிக்குள் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் லாரியில் இருந்து குதித்து சிறு காயங்களுடன் தப்பினாா். வனப் பகுதியில் உருண்டோடி கவிழ்ந்த லாரியில் இருந்து மாங்காய்கள் வனப் பகுதியில் சிதறிக் கிடந்தன. சத்தியமங்கலம் வனத் துறையினா், போலீஸாா் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.