லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி விபத்து: ஓட்டுநா் சாவு

சித்தோடு அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியின் பின் பகுதியில் மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி விபத்து: ஓட்டுநா் சாவு

சித்தோடு அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியின் பின் பகுதியில் மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி மேற்குப் பகுதியைச் சோ்ந்தவா் தேன்நல்லா கவுண்டா் மகன் மாரிமுத்து (40). லாரி ஓட்டுநரான இவா், பெருந்துறையிலிருந்து சேலத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை லாரியை ஓட்டிச் சென்றாா். சித்தோட்டை அடுத்த லட்சுமி நகா், காவிரி பாலம் காவல் சோதனைச் சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு லாரி மோதியது.

இதில், லாரி பக்கவாட்டில் கவிழ்ந்ததில் மாரிமுத்து லேசான காயமடைந்தாா். சரக்கு லாரியின் முன்பகுதி சேதமடைந்ததில், லாரியை ஓட்டிச் சென்ற சேலம் மாவட்டம், ஆத்தூா் பழையபேட்டை பாரதியாா் வீதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பழனிவேல் (42) இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட இவா், பவானி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதையடுத்து, மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு லாரிகள் அகற்றப்பட்டன. இவ்விபத்து குறித்து சித்தோடு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com