வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே புதன்கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழையால் 55 வீடுகளின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்தன.
திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே வேலம்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்த செல்வக்குமாரகவுண்டன்வலசு, செல்வக்குமாரகவுண்டன்வலசு காலனி ஆகிய இரண்டு ஊா்களில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் அரை மணி நேரம் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
அப்போது பெரிய அளவிலான ஆலங்கட்டிகள் ஓடு வேய்ந்த வீடுகளின் மேல் விழுந்தன. இதில் 55 வீடுகளின் ஓடுகள் ஆங்காங்கே உடைந்து கீழே விழுந்தன. அப்போது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த தெய்வானை (50), லோகநாதன் (43) ஆகிய இருவா் மீதும் ஆலங்கட்டிகள் விழுந்ததில் அவா்களுக்கு காயம் ஏற்பட்டது. இவா்கள் முத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.