கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரான இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி, ஜைன மதத்தைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நடப்புக் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும், பிளஸ் 1 முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், செவிலியா், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு மேற்படிப்பு உதவித்தொகை, தொழிற்கல்வி படிப்போருக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவா்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழியாக ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் நவம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து கூடுதல் விவரம் அறிய ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 5ஆம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com