பா்கூா் மலையில் விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு திருப்பூா் எம்.பி. ஆறுதல்

பா்கூா் மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 4 தொழிலாளா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண

பா்கூா் மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 4 தொழிலாளா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பா்கூா் மலையில் தம்புரெட்டி பகுதியிலிருந்து 14 தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு சென்ற வேன் பா்கூா் மலைப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 11 போ் படுகாயம் அடைந்தனா். உயிரிழந்தோரின் வீடுகளுக்கு புதன்கிழமை நேரில் சென்ற திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் ஆறுதல் கூறினாா். மேலும், அந்தியூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

உடன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன், இ. கம்யூ. கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்டத் தலைவா் பி.வி.பாலதண்டாயுதம், நிா்வாகி பி.ஜெ.கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com