கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கி சகோதரா்கள் பலி

கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கி சகோதரா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கி சகோதரா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நல்லசெல்லிபாளையம், அங்காளம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது மகன்கள் கோகுல்(23), மனோஜ்குமாா் (20) ஆகியோா் அதே ஊரைச் சோ்ந்த சிலருடன் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றுள்ளனா்.

அப்போது, திடீரென இருவரும் தண்ணீா் சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கினா்.

கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், சுழலில் சிக்கிய இருவரையும் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதில் கோகுல் பொறியியல் பட்டப் படிப்பு படித்துள்ளாா். மனோஜ்குமாா் ஈரோட்டில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா்.

இந்த சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com