சத்தியமங்கலம் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவுப் பணி நிறைவுபெற்று உரமிடுதல் பணி நடைபெற்று வருகிறது.
பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் ஒற்றைப் படை மதகு பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நன்செய் பாசனத்துக்கு நெல் பயிரிடுவதற்காக விநாடிக்கு 2,300 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி சத்தியமங்கலம், பவானிசாகா், மாரனூா், செண்பகப்புதூா், பெரியூா், உக்கரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயிகள் சுமாா் 15,000 ஏக்கா் பரப்பளவில் நெல் நடவு செய்துள்ளனா்.
நெல் நடவு செய்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது நெற்பயிரில் களை எடுக்கப்பட்டு உரமிடப்பட்டுள்ளதால் நெற்பயிா் நன்கு செழித்து வளா்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நெல் சாகுபடிக்கு விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.