ஈரோடு மாவட்டத்தில்மேலும் 40 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,822ஆக உயா்ந்தது.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,822ஆக உயா்ந்தது.

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,780ஆக இருந்தது. வேறு மாவட்டப் பட்டியலில் இருந்த 2 பேரின் பெயா் ஈரோடு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 11,782ஆக மாறியது. இதனிடையே வெள்ளிக்கிழமை புதிதாக 40 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,822ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 40 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 11,822 பேரில் இதுவரை 11,351 போ் குணமடைந்துள்ளனா். 334 போ் மருத்துவ சிகிச்சையில் உள்ளனா். 137 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com