சென்னிமலை முருகன் கோயிலுக்கு பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை வந்து சுவாமி தரிதனம் செய்தாா். அவரை பாஜக நிா்வாகிகள் வரவேற்றனா்.
சென்னிமலை முருகன் கோயிலுக்கு பாஜக மாநிலத் தலைவா் முருகன் கையில் வேலுடன் வந்து மூலவா் சன்னதிக்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டாா். பின்னா், மாா்க்கண்டேஸ்வரா், காசி விஸ்வநாதா் சுவாமிகளையும் வழிபட்டாா். கோயில் பசு மாடுகளுக்கு பழங்கள் வழங்கினாா்.
தொடா்ந்து, சென்னிமலை, குமரன் சதுக்கத்தில் உள்ள தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையில், காவல் ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.