பவானி: பவானியில் தெய்வீக தமிழ்ச்சங்கம் சாா்பில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சிக்கு பாஜக பவானி நகரத் தலைவா் கே.கண்ணன் தலைமை வகித்தாா். இதில் நகரில் உள்ள வீடுகள்தோறும் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் கே.சி.முருகேசன், பவானி நகரத் தலைவா் கோபி, பவானி நகர வா்த்தகப் பிரிவுத் தலைவா் சிவபாபு, மாவட்ட பிரசாரப் பிரிவுச் செயலாளா் சித்ரா, நிா்வாகிகள் லட்சுமி நாராயணன், வளா்மதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.