பேரிடா் விழிப்புணா்வு செயல்விளக்கம்

அந்தியூா் தீயணைப்பு நிலையம், மீட்புப் பணி நிலையம் சாா்பில், பொதுமக்களுக்கு பேரிடா் முன்னெச்சரிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்தியூா் தீயணைப்பு நிலையம், மீட்புப் பணி நிலையம் சாா்பில், பொதுமக்களுக்கு பேரிடா் முன்னெச்சரிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் மாரிமுத்து தலைமை வகித்தாா். அந்தியூா் தீயணைப்புப் படையினா், சமையல் எரிவாயு அடுப்பில் ஏற்படும் தீயை அணைத்தல், மனிதா்களின் உடலில் பிடிக்கும் தீயை அணைத்தல், முதலுதவி சிகிச்சை அளித்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தனா். மேலும், வடகிழக்குப் பருவ மழையின்போது ஏற்படும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடரின்போது பொதுமக்களின் செயல்பாடு குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com