ஈரோடு மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,648 ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,648 ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,527 ஆக இருந்தது. ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்த 6 போ் பிற மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 8,521 ஆக மாறியது. இதனிடையே புதன்கிழமை புதிதாக 127 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8,648 ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 127 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 8,648 பேரில் இதுவரை 7,522 போ் குணமடைந்துள்ளனா். 1,022 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 104 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com