சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனத்தில் 8 வயது ஆண் புலி இறந்துகிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப் பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது துருவமலை என்ற மலைச்சரிவில் துா்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை களஇயக்குநா் அருண்லால், வனத் துறை அலுவலா்கள், தொண்டு நிறுவன ஊழியா்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனா். அங்குள்ள ஓடையில் நீா் அருந்த வந்த புலி இறந்ததுகிடந்தது தெரியவந்தது. கால்நடை மருத்துவக் குழுவினா் புலியின் உடலை அதே இடத்தில் உடல் கூறாய்வு செய்து அதன் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பினா். புலியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததால் தண்ணீா் குடிக்க வரும்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து அதே இடத்தில் புலியின் உடல் எரியூட்டப்பட்டது. புலி இறப்பு குறித்து தேசிய புலிகள் ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.