சித்தோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவாா்க்கும் வகையில் செயல்படும் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய
ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற  திமுக  நிா்வாகிகள்.
ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற  திமுக  நிா்வாகிகள்.

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவாா்க்கும் வகையில் செயல்படும் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, பவானியை அடுத்த சித்தோடு பேருந்து நிறுத்தம் அருகே திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு, கரூா், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சாா்ந்த இளைஞரணி, மாணவரணி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். திமுக மாநில துணைப் பொதுச் செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன், உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், மாநில நெசவாளா் அணி செயலாளா் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாரம்பரியம் மிக்க அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவாா்க்கும் வகையில் செயல்படும் துணைவேந்தா் சூரப்பாவின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், தமிழக அரசை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், அந்தியூா் ஒன்றிய திமுக செயலாளா் ஏ.ஜி.வெங்கடாசலம், பவானி நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளா் ஜெ.திருவாசகம், துணை அமைப்பாளா் கே.எம்.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com