மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, சென்னிமலையில் புரட்சிகர இளைஞா் முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பைச் சோ்ந்த தமிழினியன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், கி.வே.பொன்னையன் (தற்சாா்பு விவசாயிகள் சங்கம்), ஈஸ்வரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), எஸ்.பொன்னுசாமி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஆா்.பாலசுப்பிரமணியம் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) உள்ளிட்டோா் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசினா்.
இதில், புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பைச் சோ்ந்த சதீசு, குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.