பெருந்துறை காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, வெள்ளோடு ஆகிய காவல் நிலையத்துக்கு உள்பட்ட மனுதாரா்கள் குறை தீா்வு, மனு விசாரணை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை பழைய பேருந்து நிலையம், சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, வெள்ளோடு ஆகிய காவல் நிலையத்துக்கு உள்பட்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. முகாமில் மொத்தம் 48 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 27 மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.
இதில், பெருந்துறை காவல் ஆய்வாளா் சரவணன், சென்னிமலை காவல் ஆய்வாளா் செல்வராஜ், அறச்சலூா் காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.