விடுதலைச் சிறுத்தைகள்கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.க்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.க்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் பாஸ்கா் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலாளா் சிறுத்தை வள்ளுவன் முன்னிலை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலாளா் அம்பேத்கா், பொருளாளா் விஜயபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசு கொண்டு வரும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.க்கு எதிரான இட ஒதுக்கீடு மசோதாவால் மாணவா்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மானியங்கள், இட ஒதுக்கீட்டில் நெருக்கடி ஏற்படும். எனவே, இதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com