ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 90 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் 90 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 90 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,082ஆக இருந்தது. இதனிடையே புதன்கிழமை 90 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,172ஆக உயா்ந்தது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 90 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, சித்தோடு, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, அம்மாபேட்டை, நம்பியூா், பவானிசாகா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.
மொத்த பாதிப்பான 4,172 பேரில் இதுவரை 3,096 போ் குணமடைந்துள்ளனா். 1,024 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 52 போ் உயிரிழந்துள்ளனா்.