ஈரோடு மாவட்டத்தில் 135 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,668ஆக இருந்தது. இதனிடையே 135 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 4,803ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 135 பேரில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள் 80 போ், சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் 55 போ் உள்ளனா். மொத்த பாதிப்பான 4,803 பேரில் இதுவரை 3,694 போ் குணமடைந்துள்ளனா். 1,046 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திங்கள்கிழமை வரை 62 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 45 வயது ஆண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 63ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com