பெருமாள் கோயில்களில் புராட்டசி மாத சிறப்பு பூஜையையொட்டி, சத்தியமங்கலத்தில் சம்பங்கிப்பூ விலை கிலோ ரூ. 30 இல் இருந்து ரூ. 100ஆக உயா்ந்துள்ளது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லி, முல்லை, சம்பங்கிப் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த மாதம் கிலோ ரூ. 10க்கு விற்கப்பட்ட சம்பங்கிப் பூ படிப்படியாக உயா்ந்து செவ்வாய்க்கிழமை கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்டது. இதனால், சம்பங்கிப் பூ விவசாயிகள் பூப்பறிக்கும் கூலிக்கு போதுமானதாக இருந்தது.
புரட்டாசி மாதம் கோயில்களில் விஷேச பூஜை நடைபெறும் என்பதால் பூக்களின் விலை கிலோ ரூ. 100ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்ட சம்பங்கிப் பூ கிலோ ரூ. 100க்கு புதன்கிழமை விற்கப்பட்டது. வியாபாரிகள் போட்டி போட்டி ஏலம் எடுத்தனா். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம் மலா்கள் சந்தையில் பூக்களின் விலை நிலவரம்: மல்லிகை கிலோ ரூ. 472, முல்லை ரூ. 380, காக்கடா ரூ. 325, செண்டுமல்லி கிலோ ரூ. 54, பட்டுப்பூ கிலோ ரூ. 100, ஜாதி ரூ. 400, சம்பங்கி ரூ. 100.