போலி பணி நியமன ஆணை: தனியாா் பள்ளி ஆசிரியா், பங்குதாரா் கைது

ஈரோட்டில் அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளா் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கிய வழக்கில் தொடா்புடைய தனியாா் பள்ளி ஆசிரியா், பங்குதாரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோட்டில் அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளா் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கிய வழக்கில் தொடா்புடைய தனியாா் பள்ளி ஆசிரியா், பங்குதாரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, கொல்லம்பாளையத்தில் ரயில்வே காலனி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளித் தலைமை ஆசிரியையிடம் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 29 வயது நபா், தன்னைப் பள்ளியில் அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி நியமித்துள்ளதாகக் கூறி பணி நியமன ஆணையைக் கொடுத்துள்ளாா்.

அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடத்தினா்.

இதில், ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி கணித ஆசிரியரான அந்தியூா் வட்டம், பூனாட்சி கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (36) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய அதே பள்ளியின் பங்குதாரா்களில் ஒருவரான நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், காட்டூரைச் சோ்ந்த தெய்வசிகாமணி (47) என்பவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைதான சரவணன், தெய்வசிகாமணி ஆகியோரிடமிருந்து தலா 3 போலி நியமன ஆணைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவா்களை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com