8 பயனாளிகளுக்குதீவனப் புல் நறுக்கும் கருவி

ஈரோடு அருகே மேட்டுக்கடையில் ஆவின் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் ரூ.2.56 லட்சம் மதிப்பில் 8 பயனாளிகளுக்கு தீவனப் புல் நறுக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.
பயனாளிகளுக்கு தீவனப் புல் நறுக்கும் கருவியை வழங்கிய எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு.
பயனாளிகளுக்கு தீவனப் புல் நறுக்கும் கருவியை வழங்கிய எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு.

ஈரோடு, செப்.25: ஈரோடு அருகே மேட்டுக்கடையில் ஆவின் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் ரூ.2.56 லட்சம் மதிப்பில் 8 பயனாளிகளுக்கு தீவனப் புல் நறுக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஆவின் துணைத்தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. கே.ஸ் தென்னரசு முன்னிலை வகித்தாா். எம்.எல்.ஏ கே.வி.இராமலிங்கம் பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகளை வழங்கினாா்.

பகுதிச் செயலாளா்கள் கே .சி. பழனிசாமி, கேசவமூா்த்தி, ஜெகதீஷ், ஜெயராஜ், கோவிந்தராஜ், ராமசாமி, தங்கமுத்து, ஊராட்சி மன்ற தலைவா் மோகனப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com