அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மூன்று வாக்குச் சாவடிகளில் கரோனா பாதித்த தலா ஒருவா் செவ்வாய்க்கிழமை வாக்கினைச் செலுத்தினா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு 6 மணிக்கு முடிந்த பின்னா், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கரோனா தொற்றால் பாதித்தோா் வாக்கினைப் பதிவு செய்ய 7 மணி வரையில் அனுமதிக்கப்பட்டனா். அந்தியூா் தொகுதியில் கிழக்குப் பள்ளி, தவிட்டுப்பாளையம் உயா்நிலைப் பள்ளி, அத்தாணி மேல்நிலைப் பள்ளியில் தலா ஒரு கரோனா நோயாளிகள் வாக்கினைப் பதிவு செய்தனா்.
சிறப்பு பாதுகாப்பு உடை அணிந்தபடி சென்ற இவா்கள் வாக்கினைச் செலுத்தினா். முன்னதாக, வாக்களிக்க வந்தவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, சுகாதாரப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்து சுற்றுப்புறப் பகுதியியை தூய்மைப்படுத்தினா்.