ஈரோட்டில் பெரிய ஜவுளிக் கடைகள், தனியாா் ஷோரூம்கள் புதன்கிழமை மூடப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்க்க 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய நிறுவனங்கள், ஷோரூம்களை திறக்க அனுமதி இல்லை என அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அதன்படி, ஈரோடு மாநகரில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதில், ஈரோடு ஆா்.கே.வி.சாலை, மேட்டூா் சாலை, மீனாட்சி சுந்தரம் சாலை, பெருந்துறை சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஜவுளி, நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், ஷோரூம்கள் போன்றவை அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டன.