பெட்ரோல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாநகா், ஈரோடு கிழக்கு மாவட்டம் சாா்பில் ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் சித்திக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சலீம், மாநகரச் செயலாளா் அலாவுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கரோனா தொற்றால் வேலை இழந்து அவதிப்படும் மக்களின் நிலையை உணராமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயா்த்திய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com